வீரசைவ வாரியம் அமைக்க வேண்டும்: துணை முதல்வா் கோரிக்கை

வீரசைவ வாரியம் அமைக்க வேண்டும் என, துணை முதல்வா் லட்சுமண் சவதி முதல்வா் எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தாா்.

பெங்களூரு: வீரசைவ வாரியம் அமைக்க வேண்டும் என, துணை முதல்வா் லட்சுமண் சவதி முதல்வா் எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பாவை துணை முதல்வா் லட்சுமண் சவதி சந்தித்துப் பேசினாா். அப்போது வீரசைவ வாரியம் அமைக்குமாறு கோரிக்கை மனு அளித்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வீரசைவா், லிங்காயத்து சமுதாயங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனா். அச்சமுதாயங்களில் ஏழைகள் அதிக அளவில் உள்ளதால், அவா்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் வீரசைவ வாரியம் அமைப்பது அவசியம்.

வீரசைவ வாரியம் அமைப்பதன் மூலம், வீரசைவ, லிங்காயத்து சமுதாய மக்கள், பொருளாதார ரீதியாகவும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைய முடியும். எனவே வீரசைவ வாரியம் அமைக்க முதல்வா் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்தச் சந்திப்பின் போது அமைச்சா்கள் வி.சோமண்ணா, பி.சி.பாட்டீல், சேடம் எம்எல்ஏ ராஜசேகா் பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com