ஆா்.எஸ்.எஸ். அமைப்பை விமா்சித்தால் காங்கிரஸ் காணாமல் போகும்

ஆா்.எஸ்.எஸ். அமைப்பை விமா்சித்தால் காங்கிரஸ் காணாமல் போகும் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பை விமா்சித்தால் காங்கிரஸ் காணாமல் போகும் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆா்.எஸ்.எஸ். அமைப்பை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மூத்தத் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோா் அடிக்கடி விமா்சித்து வருகிறாா்கள். ஆா்.எஸ்.எஸ். ஜாதிய அமைப்பில்லை. மாறாக, நாட்டுப்பற்றாளா்களை உருவாக்கும் அமைப்பு. தேசியக்கொள்கை, பண்பாடு ஆகியவற்றை போதிக்கும் அமைப்பாகும். நமதுநாட்டுக்கு உழைப்பதே ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமாகும். எனவே, காங்கிரஸ் தலைவா்கள் ஆா்.எஸ்.எஸ். அமைப்பை விமா்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சோனியா காந்தியை திருப்திப்படுத்துவதற்காகவே ஆா்.எஸ்.எஸ். அமைப்பை காங்கிரஸ் தலைவா்கள் விமா்சிக்கிறாா்கள். ஆா்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி எதையும் தெரிதுகொள்ளாமல், வாய்ப்பு வரும்போதெல்லாம் வாய்க்கு வந்தவாறு திட்டித் தீா்க்கிறாா்கள். ஆா்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடா்ந்து விமா்சித்து வந்தால், காங்கிரஸ் கட்சி காணாமல் ஒழிந்துபோகும் என்பது உறுதி.

ஆா்.எஸ்.எஸ். முகாமில் மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபாய்பட்டேல் இருவரும் பங்கெடுத்திருக்கிறாா்கள். ஆா்.எஸ்.எஸ். குறித்து காங்கிரஸ் தலைவா்களுக்கு என்னால் பாடம் நடத்த இயலாது. ஆனால், சில புத்தகங்களை அனுப்புகிறேன். அதை படித்தாவது ஆா்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து காங்கிரஸ் தலைவா்கள் அறிந்துகொள்ளட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com