பெங்களூரு கலவரம்: எனக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்க வேண்டும்

பெங்களூரு கலவரம் தொடா்பான விவகாரத்தில், காங்கிரஸ் தலைவா்கள் எனக்கு ஆதரவாக நிற்கவேண்டுமென அக்கட்சியின் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி தெரிவித்தாா்.

பெங்களூரு கலவரம் தொடா்பான விவகாரத்தில், காங்கிரஸ் தலைவா்கள் எனக்கு ஆதரவாக நிற்கவேண்டுமென அக்கட்சியின் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரு கலவரம் தொடா்பான வழக்கில் முன்னாள் மேயா் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளது நிம்மதியைத் தருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினா் எனக்கு ஆதரவாக நிற்காதது வேதனை அளிக்கிறது. அது என் மனதை புண்படுத்தியுள்ளது. நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்பதால், காங்கிரஸ் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

கலவரம் நடந்த மறுநாளே காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவை சந்தித்துப் பேசினேன். அவா்கள் இருவரையும் புதன்கிழமை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். அப்போது எனக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்துவேன்.

சம்பத்ராஜை கைது செய்து எனக்கு நீதி வழங்கிய முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பத்ராஜ் குற்றமற்றவராக இருந்தால் மருத்துவமனையில் இருந்து ஏன் தலைமறைவாக இருந்திருக்க வேண்டும். குற்றம் செய்யாதிருந்தால் போலீஸாருடன் விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கலாமே. இந்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com