யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோகேஷ் (27), மஞ்சுநாத் (25), கோவி (30) ஆகிய 3 பேரும் பெங்களூரு, ஹெப்பாள் காவல் சரகம், குடதள்ளி பிரதான சாலையில் திங்கள்கிழமை யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 2 ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஹெப்பாள் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.