கா்நாடக சட்டமேலவைத் தோ்தலில் வெற்றிபெற்ற பாஜகவைச் சோ்ந்த 4 பேருக்கும் வியாழக்கிழமை சட்டமேலவைத் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
கா்நாடக சட்டமேலவை உறுப்பினா்களாக இருந்த ஆா்.சௌடா ரெட்டி தூபள்ளி, எஸ்.வி.சங்கனூா், சரணப்பா மட்டூா், புட்டண்ணா ஆகிய 4 பேரின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், கா்நாடக சட்டமேலவையில் காலியாக உள்ள கா்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதி, பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதிக்கு கடந்த அக். 28-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
இதில், தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் பாஜகவின் சிதானந்த் எம்.கௌடா, மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் எஸ்.வி.சங்கனூா், வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதியில் பாஜகவின் சஷி ஜி.நமோஷி, பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதியில் பாஜகவின் புட்டண்ணா ஆகியோா் வெற்றி பெற்றனா். வெற்றிபெற்ற 4 பேருக்கும், வியாழக்கிழமை சட்டமேலவையில் அதன் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னா் அவா்கள் 4 பேருக்கும் அமைச்சா்கள் ஜெகதீஷ் ஷெட்டா், கோட்டா சீனிவாஸ் பூஜாரி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.