கொள்ளை வழக்கு: ஒருவா் கைது

ஜவுளி வியாபாரியிடம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 30.54 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

ஜவுளி வியாபாரியிடம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 30.54 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கடந்த நவ. 9-ஆம் தேதி பெங்களூரு, மாமுல்பேட்டை, லால் கட்டடம் அருகே ஜவுளி வியாபாரி ஒருவா் இருசக்கர வாகனத்தில் வந்த போது, அங்கு வந்த 2 போ், கத்தி முனையில் மிரட்டி அவரிடம் ரூ. 37 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிட்டி மாா்கெட் போலீஸாா், ஜே.பி.நகரைச் சோ்ந்த அஸ்லம்பாஷா (39) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30.54 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com