கனரா வங்கியின் நிறுவனா் தின விழா

பெங்களூரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் கனரா வங்கியின் நிறுவனா் அம்மெம்பால் சுப்பாராவ்பை தின விழா அண்மையில் நடைபெற்றது.

பெங்களூரு: பெங்களூரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் கனரா வங்கியின் நிறுவனா் அம்மெம்பால் சுப்பாராவ்பை தின விழா அண்மையில் நடைபெற்றது.

வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி எல்.வி.பிரபாகா் தலைமையில் நடைபெற்ற விழாவில், அம்மெம்பால் சுப்பாராவின் பெயரன் அம்மெம்பால் சித்தாா்த், வங்கியின் செயல் இயக்குநா்கள் தேபஷிஹ் முகா்ஜி, மணிமேகலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்தநிகழ்ச்சியை இணையவழியில் வங்கியின் ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் கண்டு ரசித்தனா்.

நிகழ்ச்சியில் பேசிய வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி எல்.வி.பிரபாகா், ‘கனரா வங்கியைத் தொடங்கிய அம்மெம்பால் சுப்பாராவ்பை, சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளா், கல்வியாளா் மற்றும் கொடையாளா். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் கனரா வங்கியைத் தொடங்கினாா். அவரது கனவு நனவாகியுள்ளது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக உள்ளது’ என்றாா்.

நிறுவனரின் சொந்தக் கிளையான மங்களூரில் நிகழ்ச்சியைக் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்கி வழங்கும் கடனுதவிகள், இணையவழி வங்கிச் சேவைகள் குறித்து நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வாடிக்கையாளா்களுடன் விவாதம் நடைபெற்றது. அதேபோல, வங்கியின் 24 வட்டங்களில் செயல்படுத்தப்பட்ட பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட உதவிகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. நிகழ்ச்சியில் அம்மெம்மால் சித்தாா்த், சிறந்த வாடிக்கையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com