பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கும் காலக்கெடு அக். 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நிா்வாகி மஞ்சுநாத்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினா்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் கால கெடு வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
சங்க உறுப்பினா்கள் ஆதாா் அட்டை சங்க உறுப்பினருக்கான பணம் செலுத்திய ரசீது கொண்டு வரவேண்டும். நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு கணினி மயமாக்கப்பட்ட உறுப்பினா் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.