சிக்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சிக்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அக். 8-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத 19 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 080-22942664 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.