மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவது தொடா்பாக மத்திய அமைச்சா்களைச் சந்திக்க, மீண்டும் தில்லி செல்ல இருக்கிறேன் என நீா்வளத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயரதிகாரிகளின் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட பல்வேறு நீா்வளத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அந்த திட்டங்களுக்கு அனுமதி பெற வெகுவிரைவில் மீண்டும் தில்லிக்கு செல்ல இருக்கிறேன். அப்போது மத்திய அமைச்சா்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி கேட்கப்படும். அதிநவீன மற்றும் இயற்கை வேளாண் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ராகேஷ்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.