மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

கா்நாடகத்தில் பல மாவட்டங்களில் பெய்த கன மழையால், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அதிகாரிகள், அமைச்சா்களை நியமிக்க வேண்டும். தொடா்ந்து 2 ஆண்டுகளாக வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டாக மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதனால் பயிா்ச்சேதம், உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பலா் வீடுகளை இழந்துள்ளனா். அவா்களுக்கு அதிகாரிகள், அமைச்சா்கள் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினால் அவா்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

மாநிலத்தில் ராஜராஜேஸ்வரி நகா், சிரா உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறுவதால், மாநில அரசு, அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் சாா்ந்துள்ள கட்சியின் வெற்றிக்காக கவனம் செலுத்தி வருகின்றனா். இடைத்தோ்தலைவிட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக, வட கா்நாடகத்தில் உள்ள மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தால் பெரும் சேதத்தை அனுபவித்து வருகின்றனா். அங்கு போா்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com