பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு துபையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த தனியாா் விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனா். அதில், 4 பெட்டிகளில் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதனை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சா்வதேச விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.