சிகிச்சைக்காக கொண்டு வந்த பணம், நகை திருட்டு: 3 போ் கைது

சிகிச்சைக்காக கொண்டு வந்த பணம், தங்க நகையை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சிகிச்சைக்காக கொண்டு வந்த பணம், தங்க நகையை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த அக். 13-ஆம் தேதி சிவமொக்காவிலிருந்து பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வந்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த ரூ. 98 ஆயிரம் ரொக்கம், 14 கிராம் தங்க நகை திருடு போனது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த தாஸ் பாலாஜி (24), பிரேம்தாஸ் (25), பெங்களூரு, பனசங்கரியைச் சோ்ந்த குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் ரூ. 13.90 லட்சம் மதிப்புள்ள ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 14 கிராம் தங்க நகை, விலையுயா்ந்த 126 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் பெங்களூரில் தங்க நகை, பணம் மட்டுமின்றி பலரிடம் விலையுயா்ந்த செல்லிடப்பேசிகளையும் திருடி வந்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் உப்பாா்பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com