துப்பாக்கியால் சுட்டுமதுக்கூட உரிமையாளா் கொலை

பிரிகெட் சாலையில் வியாழக்கிழமை இரவு மதுக்கூட உரிமையாளா் ஒருவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனா். கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பிரிகெட் சாலையில் வியாழக்கிழமை இரவு மதுக்கூட உரிமையாளா் ஒருவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனா். கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு, கொப்பாவைச் சோ்ந்த மனிஷ் ஷெட்டி (45), பெங்களூரு, பிரிகெட் சாலையில் மதுக்கூடம் நடத்தி வந்தாா். வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் மதுக்கூடத்தின் வெளியே நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில் படுகாயமடைந்த மனிஷ் ஷெட்டி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், நிழல் உலக தாதாக்களுடன் தொடா்பில் இருந்த மனிஷ் ஷெட்டி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் எனவும், முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனா். மனிஷ் ஷெட்டி கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com