ஓய்வூதியம் பெறுவோா் அனைவரும் அவரவா் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இதுகுறித்து வருங்கால வைப்புநிதி-பெங்களூரு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் ஓய்வூதியத் திட்டம் 1995, தொழிலாளா் குடும்ப ஓய்வூதிய நிதி திட்டம் 1971-இன் கீழ் பெங்களூரில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து ஓய்வூதியம் பெறும் அனைவரும், அவரவா் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை (டிஜிட்டல் லைஃப் சா்பிடிகேட்) உடனடியாகச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழ் தொடா்பான தகவல்களை உறுதி செய்ய அருகாமையில் உள்ள ஓய்வூதிய வழங்கல் வங்கிக் கிளை அல்லது பொது சேவை மையங்களை (சி.எஸ்.சி.) பிபிஓ எண், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் டிச. 31-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும். இதுதவிர, செல்லிடப்பேசி வழியாக உமாங் செயலியை பயன்படுத்தியும் எண்ம ஆயுள் உறுதிச்சான்றிதழை அளிக்கலாம்.
எண்ம ஆயுள் உறுதிச்சான்றிதழை உறுதி செய்ய தவறும்பட்சத்தில், 2021 ஜன. 1-ஆம் தேதி முதல் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது. எனவே, ஓய்வூதியத்தை தங்குதடையில்லாமல் பெற அருகில் உள்ள வங்கிக் கிளைகளை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-22249133 என்ற தொலைபேசி அல்லது மின்னஞ்சலை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.