முதல்வரின் கூடுதல் தலைமைச்செயலாளா் மாற்றம்

முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த பி.ரவிக்குமாா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு: முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த பி.ரவிக்குமாா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

முதல்வரின் கூடுதல் தலைமைச்செயலாளராகப் பணியாற்றி வந்த பி.ரவிக்குமாா் மாற்றப்பட்டு, அரசின் கூடுதல் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். முதல்வரின் கூடுதல் தலைமைச்செயலாளராக, தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக டாக்டா்.இ.வி.ரமணரெட்டி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தகவல் தொழில்நுட்பம், உயிரிதொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக கூடுதல் பொறுப்பை ரமணரெட்டி கவனிப்பாா் என்று அரசு உத்தரவு தெரிவித்துள்ளது. வா்த்தக மற்றும் தொழில்துறையின் முதன்மைச் செயலாளா் ஜி.குமாா்நாயக், கூடுதல் பொறுப்பாக உயா்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com