அமைச்சா் சசிகலா ஜொள்ளே கரோனாவால் பாதிப்பு

மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவா் சசிகலா ஜொள்ளே. அண்மையில் இவரது உறவினா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா ஜொள்ளே, தன்னையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவா் 14 நாள்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இது குறித்து சசிகலா ஜொள்ளே சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, கரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா். கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சா் சசிகலா ஜொள்ளே விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்வா் எடியூரப்பா சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com