தந்தை, மகன் சென்ற மோட்டாா் சைக்கிளை வழிமறித்த மா்மநபா்கள், கத்தி முனையில் ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனா்.
பெங்களூரு, ஜக்கூரைச் சோ்ந்தவா் சீனிவாஸ். இவா் தனது மகனுடன் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். கண்ணூா் அருகே அவரது மோட்டாா் சைக்கிளை வழிமறித்த 2 போ், சீனிவாஸ், அவரது மகனை கத்தி முனையில் மிரட்டி, ரூ. 70 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.