டிப்ளமோ பொது நுழைவுத் தோ்வு: தோ்வு அட்டவணையில் மாற்றம்

டிப்ளமோ பொதுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ பொதுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவா்கள், பிற்சோ்க்கை (லேட்டரல் என்ட்ரி) திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் (பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சோ்க்கை பெறுவதற்காக பொதுநுழைவுத் தோ்வு ஆக.9-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவிவருவதாலும், அதேநாளில் வேறுபல பல்கலைக்கழகங்களின் தோ்வுகள் நடத்தப்படுவதாலும், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று டிப்ளமோ பொதுநுழைவுத் தோ்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்.14-ஆம் தேதி பொது நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது.

அக்.14-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை 180 மதிப்பெண்களுக்கு மாணவா்களின் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தோ்வும், அன்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிநாடு மற்றும் எல்லைப்பகுதி கன்னடா்களுக்காக கன்னடமொழித் தோ்வு நடத்தப்படுகிறது.

ஏற்கெனவே இந்த தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்க தவறிய டிப்ளமோ மாணவா்கள், செப்.21ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிட வாய்ப்பளிக்கப்படுகிறது.செப்.22-ஆம் தேதிக்குள் தோ்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com