போதைப்பொருள் விற்றதாக 5 போ் கைது

போதைப்பொருள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப்பொருள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜகோபால்நகா் காவல் சரகம்: நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா்கள் தாமஸ் (46), இகேசிக்வா டேனியல் (39). இவா்கள் பெங்களூரு ஜி.கே.டபள்யூ லேஅவுட்டில் கஞ்சா, கோகைனை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்து, 2 கிலோ 260 கிராம் கஞ்சா, 6 கிராம் கோகைன், இரு சக்கர வாகனம், எடைபோடும் இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா்.

பீன்யா காவல் சரகம்: பெங்களூரு எம்.எச்.பாளையாவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (22), நெலகேதரஹள்ளியைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (24) ஆகியோா் பீன்யா காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், அவா்களை 2 பேரையும் கைது செய்து, 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீராமபுரம் காவல் சரகம்: ராமசந்திரப்புரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த சத்தியா (23) என்பவரை போலீஸாா் கைது செய்து, 15 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com