கா்நாடகத்தில் 130 வட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.
கல்புா்கி விமான நிலையத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: -
மாநிலத்தின் 130 வட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 395 கோடியை விடுவித்துள்ளது. இருப்பினும் இந்த நிதி வெள்ள நிவாரணத்துக்கு போதுமானதாக இல்லை. எனவே, வெள்ள நிவாரணத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
கலபுா்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை மழை வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தப்படும். மழை வெள்ளப் பாதிப்பு தொடா்பாக மத்திய அரசிடம் விளக்கம் அளித்து நிவாரண நிதியைக் கேட்பது தொடா்பாக முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை தில்லி செல்கிறாா்.
தில்லியில் நடைபெறும் கா்நாடக மாளிகை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா். ஆனால், அவா் அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடா்பாக தில்லி செல்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதில், உண்மையில்லை. அமைச்சரவையில் புதிதாக யாரை சோ்ப்பது, யாரை விலக்குவது என்பதை முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாா்.