கோரமங்களா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, கோரமங்களா காவல் நிலையத்தில் ஏப். 9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத 16 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942570 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.