பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 53 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 3 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கரோனா தொற்றின் பாதிப்பை அடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள், போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.