மங்களூரு: கா்நாடக எம்.எல்.சி.க்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தின், தென்கன்னட மாவட்டத்தைச் சோ்ந்த மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவரும், எம்.எல்.சி.யுமான ஹரீஷ்குமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ஹரீஷ்குமாருக்கு கரோனா தொற்று உறுதியானது. இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது உடல்நிலைக் குறைவு காணப்பட்டதால், கரோனா சோதனை செய்துகொண்டுள்ளாா். அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.