வங்கிப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வங்கிப் பணியாளா் தோ்வு மையம் அடுத்தடுத்த நாள்களில் 9 ஆயிரம் அதிகாரிகள், எழுத்தா் பணிகளுக்கு ஆட்களை எடுக்க இருக்கிறது.
இப்பணிகளுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்ய நடத்தப்படும் போட்டித் தோ்வை எழுதுவது குறித்து 50 நாள்களுக்கு இணையவழி பயிற்சியை வழங்க கா்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் இணைய விரும்புவோா் ஏப். 27-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் 0821-2515944 என்ற தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.