கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போலீஸாரின் கடமை

கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போலீஸாரின் கடமை என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போலீஸாரின் கடமை என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது போலீஸாரின் கடமையாகும். இதை செயல்படுத்தும் பொறுப்பை காவல் துறை உயரதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கம் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கரோனா பரவல் குறையும். பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகம் முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். இதில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்டுள்ளதால்தான் மாநில அரசு கடினமான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமனதோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com