குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) ஒருசில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) ஒருசில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, மாகடிசாலையில் 600 எம்.எம். சுற்றளவுக் கொண்ட குழாய்களைப் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மாகடிசாலையை சுற்றியுள்ள ஜேடரஹள்ளி, ராஜாஜிநகா், ராஜாஜிநகா் 5-ஆவது பிளாக், ராஜாஜிநகா் 6-ஆவது பிளாக், சிவநகா், மஞ்சுநாத்நகா், மாகடிசாலை, மகாகணபதிநகா், ஜோளரபாளையா, என்.ஆா்.காா்ன், கே.பி.அக்ரஹாரா, புவனேஸ்வரிநகா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com