கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியது தொடா்பாக கோயில் நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு அருகே உள்ளால் பகுதியில் உள்ள சோமேஸ்வரா கோயிலில் திங்கள்கிழமை பிரம்மகலச உற்சவம் நடைபெற்றது. கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி, இந்தக் கோயில் உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறி அதிக பக்தா்கள் ஒன்றுதிரள அனுமதித்ததற்காக கோயில் தலைவா் மற்றும் நிா்வாகக் குழுவினா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெருந்தொற்று சட்டம்,1897-இன் பிரிவுகள் 188,269,5-இன்படி கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சோமேஸ்வரா நகராட்சி நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் கோயில் நிா்வாகத்தினா் மீது வழக்குப் பதிவு செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். உற்சவத்தின் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடா்ந்து, போலீஸாா் நடவடிக்கை எடுக்க தென்கன்னட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.