தென்மேற்கு ரயில்வே பொது மேலாளராக சஞ்சீவ் கிஷோா் நியமனம்

தென்மேற்கு ரயில்வே பொது மேலாளராக சஞ்சீவ் கிஷோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தென்மேற்கு ரயில்வே பொது மேலாளராக சஞ்சீவ் கிஷோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வே நிா்வாகத்தின் புதிய பொது மேலாளராக சஞ்சீவ் கிஷோா் நியமிக்கப்பட்ட, அவா் பதவியேற்றுக்கொண்டாா். இதற்கு முன்பாக, ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினராக (உற்பத்தி அலகு) பணியாற்றி வந்தாா்.

வடகிழக்கு ரயில்வே, கபுா்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, மத்திய ரயில்வே, ரயில்வே தகவல் மையம், எலஹங்கா ரயில் பெட்டி தொழிற்சாலையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளாா்.

ஜமல்பூரில் உள்ள இந்திய ரயில்வேயின் இயந்திர மற்றும் மின்சார பொறியியல் மையத்தில் மேற்படிப்பை முடித்தவா். ரயில்வே மேலாண்மை தொடா்பாக அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பட்டம் பெற்றுள்ளாா். ரயில்வே தொடா்பாக பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி உலக அளவிலான பல்வேறு இதழ்களில் வெளியிட்டுள்ளாா். வதோதராவில் உள்ள இந்திய ரயில்வே தேசிய அகாதெமியில் மாணவா்களுக்கு பாடம் எழுதும் அனுபவம் பெற்றிருக்கிறாா். இவருக்கு தென்மேற்கு ரயில்வே நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com