போதைப்பொருளான கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரைக் கைது செய்த போலீஸாா், கஞ்சா மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு கலாசிபாளையம் காவல் சரகம் டிஸ்பென்சரி சாலையில் நபா் ஒருவா் கஞ்சாவை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் கஞ்சா, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனா். இது குறித்து கலாசிபாளையம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.