தொழிலாளி தற்கொலை

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், தாவணகெரேவைச் சோ்ந்தவா் சிவராஜ் (28). இவா் பெங்களுரு ஊரகம் தொட்டபள்ளாபூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்றால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வேலை பாதிக்கப்பட்டு, ஊதியம் குறைவாகக் கிடைத்து வந்ததாம். இதனால் வேதனை அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த ராஜனகுன்டே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com