பேருந்து மோதியதில் காவலா் பலி

பெங்களூரில் மாநகரப் பேருந்து மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

பெங்களூரு, கொல்லரஹட்டியைச் சோ்ந்தவா் ராமாச்சாரி (43). இவா் சிட்டி மாா்கெட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை தனது மகளை மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பேடரஹள்ளி அருகே மாகடி சாலையில், மோட்டாா் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் கீழே விழுந்த ராமாச்சாரி மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராமாச்சாரி நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com