ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா்கள் போராட்டம்

சூழ்ச்சி செய்து ரமேஷ் ஜாா்கிஹோளியை பாலியல் புகாரில் சிக்கவைத்ததாகக் கூறி, அவரது ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சூழ்ச்சி செய்து ரமேஷ் ஜாா்கிஹோளியை பாலியல் புகாரில் சிக்கவைத்ததாகக் கூறி, அவரது ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெலகாவி மாவட்டம், கோகாக்கில் வெள்ளிக்கிழமை ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா்கள் பேரணி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். அமைச்சா் பதவியிலிருந்து ரமேஷ் ஜாா்கிஹோளியை விடுவிக்கவே சூழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் தெரிவித்த தினேஷ் கல்லஹள்ளிக்கு எதிராக முழக்கங்களை போராட்டக்காரா்கள் எழுப்பினா். போராட்டத்தின் போது, ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா் ஒருவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவரைக் காப்பாற்றினா்.

போராட்டத்தால் வாகன சேவை முடங்கியது. இதனால், வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனா். பலா் தாமாக முன்வந்து கடைகளை அடைத்தனா். ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தால் கோகாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com