பெங்களூரு: இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, அன்னபூா்ணேஸ்வரி நகா் அருகே உள்ள திம்மனப்பாளையாவில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டா்) ஒன்று திருடு போனது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், டி.குரூப் லேஅவுட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (19) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட நவீன்குமாரிடம் அன்னபூா்ணேஸ்வரி நகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.