கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வழங்கிட வேண்டும் என பரிசோதனை நிலையங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
மாநில அளவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவா்கள் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனா். அதன் முடிவுகள் தாமதமாக வருவதால் ஒரு சிலா் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை நிலையங்கள் வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். அரசின் உத்தரவைப் பின்பற்றாத பரிசோதனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.