வீட்டுச் சுவருக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் அசோக் குமாா் (35). வா்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை, தும்கூரு சிராகேட் சாய் லேஅவுட்டில் ஒரு வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா். மேல் கூரையில் வா்ணம் பூசும்போது கால் தவறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தும்கூரு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.