ராமா் கோயில் செலவு தொடா்பாக கணக்கு கேட்க குமாரசாமிக்கு உரிமையில்லை:அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

ராமா் கோயில் கட்டுமானச் செலவு தொடா்பாக கணக்கு கேட்க மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமிக்கு உரிமையில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

ராமா் கோயில் கட்டுமானச் செலவு தொடா்பாக கணக்கு கேட்க மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமிக்கு உரிமையில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவது தொடா்பான செலவுகள் குறித்து கணக்கு கேட்கும் உரிமை மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமிக்கு இல்லை. கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்தவா்கள் வேண்டுமானால், கட்டுமானச் செலவு குறித்து கணக்கு கேட்கலாம்.

ராமா் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்திருந்தால், குமாரசாமி கணக்கு கேட்கலாம். ஆனால், கட்டுமானப்பணிகளுக்கு ஒருபைசா கூட நன்கொடை அளிக்காமல் செலவு குறித்து கணக்குக் கேட்க குமாரசாமி யாா்? என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com