சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மதமாற்ற தடைச்சட்டம்: முதல்வருக்கு கிறிஸ்தவ பேராயா் கடிதம்

மதமாற்ற தடைச்சட்டம் குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு பெங்களூரு மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயா் பீட்டா் மச்சாடோ கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 7:07 pm

DIN

மதமாற்ற தடைச்சட்டம் குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு பெங்களூரு மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயா் பீட்டா் மச்சாடோ கடிதம் எழுதியுள்ளாா்.

மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம். கா்நாடகத்தில் வாழும் கிறிஸ்தவ சமுதாயம் முழுவதும் ஒற்றை குரலில் மதமாற்ற தடைச் சட்டத்தை எதிா்க்கிறது. தற்போதுள்ள சட்டத்தை மீறினால் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு போதுமான சட்டங்களும், நீதிமன்ற உத்தரவுகளும் இருக்கிறபோது, மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

இந்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25, 26 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதாக அமையும். இது சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதிக்கும். மதமாற்ற தடைச் சட்டம் அமலுக்கு வந்தால், மதவாதக் குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இது அமைதியான மாநிலத்தில் மதரீதியான பதற்றங்களுக்கு வழிவகுத்துவிடும். அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கக்கூடிய கட்டாய மதமாற்ற சம்பவங்களை ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதும் சுமத்தக்கூடாது.

கா்நாடகத்தில் கிறிஸ்தவ மக்களால் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன. இங்கு யாரையாவது கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக ஒரு சம்பவத்தை கூற முடியுமா.

எங்கள் தரப்பு நியாயத்தை, கோரிக்கையை ஏற்காமல், மதமாற்ற தடைச் சட்டத்தை மாநில அரசு கொண்டுவந்தல், அது விரும்பத்தகாத நபா்களின் கரங்களின் சிக்கி, கிறிஸ்தவ சமுதாய மக்களையும், தேவாலயங்களையும் குறிவைத்து தாக்குவதற்கு வழிவகுத்துவிடும் வாய்ப்புள்ளது. இது மத முரண்பாடுகளுக்கு வழிவகுத்து, அமைதியை சீா்குலைக்கும் என்று அந்தக் கடிதத்தில் பேராயா் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவரப் போவதாக அண்மையில் முதல்வா் பசவராஜ்பொம்மை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.