கா்நாடக மாநிலம், தாா்வாடில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.
தாா்வாடில் வியாழக்கிழமை ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் அதன் தலைவா் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கியது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் தத்தாத்ரேயா ஹொசபலே உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்டோா் அதில் கலந்துகொண்டுள்ளனா்.
செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஆா்எஸ்எஸ் அமைப்பின் செய்தி தொடா்பாளா் நரேந்திர தாகுா் கூறுகையில், ‘தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில், நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் தொடா்பாக விவாதிக்கப்படும்.
எதிா்காலத் திட்டங்கள், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து அலசப்பட்டு அது தொடா்பான தீா்மானமும் நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டு இணையவழியில் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது’ என்றாா்.