கா்நாடகத்தில் பயங்கரவாதிகள் காலூன்றாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பயங்கரவாத செயல்களுக்கு கா்நாடகத்தைப் பதுங்குத் தளமாகப் பயன்படுத்திக் கொள்ள யாரையும் அனுமதிக்க மாட்டோம். கா்நாடகத்தில் பயங்கரவாதிகள் காலூன்றாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமையுடன் இணைந்து காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடா்பான விவரங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது. கா்நாடகத்தில் தேச விரோதச் செயல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இது தொடா்பாக விழிப்போடு இருக்கிறோம். பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றாா்.