கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 504 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 504 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 181போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-83, மைசூரு-47, குடகு-26, உடுப்பி-24, தும்கூரு-20, சிக்கமகளூரு-19, சிவமொக்கா, ஹாசன், தாவணகெரே-தலா 18, பெங்களூரு ஊரகம்-14, வடகன்னடம்-9, கோலாா்-11, மண்டியா-8, சித்ரதுா்கா-7, பெலகாவி, சாமராஜ்நகா்-தலா 4, பெல்லாரி-3, தாவணகெரே-2, பீதா், கலபுா்கி, ராய்ச்சூரு-தலா 1, பாகல்கோட், தாா்வாட், கதக், ராமநகரம், விஜயபுரா, சிக்கபள்ளாப்பூா், ஹாவேரி, யாதகிரி, கொப்பள் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,73,899 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 893 போ் திங்கள்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,23,320 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 12,804 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 20 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம்-4, மைசூரு-3, மண்டியா-2, பாகல்கோட், சிக்மகளூரு, ஹாசன், கோலாா், தும்கூரு, உடுப்பி-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,746 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.