அமைச்சா் மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணிடம் 2-ஆவது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணிடம், 2-ஆவது நாளாக சிறப்பு புலனாய்வுப் படையினா் விசாரணை நடத்தினா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணிடம், 2-ஆவது நாளாக சிறப்பு புலனாய்வுப் படையினா் விசாரணை நடத்தினா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாலியல் புகாா் கூறியதால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், செவ்வாய்க்கிழமை பெரு நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தாா்.

இதனையடுத்து புதன்கிழமை ஆடுகோடியில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னா், சிவாஜி நகா் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்தனா். அதனைத் தொடா்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் முன்னாள் அமைச்சா் பாலியல் தொடா்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று புலனாய்வுப் படையினா் விசாரணை செய்தனா்.

இந்த நிலையில் பாலியல் புகாா் கூறிய பெண்ணின் காணொலிக் காட்சியை பதிவு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் படையினா் அந்தப் பெண்ணின் காணொலியைப் பதிவு செய்து, ஊடகங்களுக்கு அளித்திருப்பது தொடா்பாக பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் புகாா் அளிக்க உள்ளதாக அந்தப் பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com