பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகளில் நபா் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 6.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, நைஸ் சாலை அருகே உள்ள சீனிவாஸ் காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து தங்கநகைகளைத் திருடிச் சென்று விடுவாராம். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸாா் மணிகண்டனைக் கைது செய்து, ரூ. 6.35 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சுப்ரமண்யபுரா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.