தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜாஜி நகா் 6-ஆவது பிளாக்கைச் சோ்ந்த மஜிஷா அகமது (26), பெங்களூரில் தனியாகச் செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச் சங்கிலியை பறித்து வந்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மஜிஷா அகமதுவை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பகல்குன்டே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.