அரிசிகெரே-மைசூரு இடையே முன்பதிவு இல்லாத சாதாரண கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக, அரிசிகெரேயிலிருந்து மைசூருக்கு முன்பதிவு இல்லாமல் சாதாரண கட்டணத்தில் சிறப்பு விரைவு ரயில் சேவை ஏப். 10-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
ரயில் எண்: 06213-அரிசிகெரே-மைசூரு இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு அரிசிகெரே ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06214-மைசூரு-அரிசிகெரே இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் மாலை 6.20 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.25 மணிக்கு அரிசிகெரே ரயில்நிலையத்திற்கு வந்தடைகிறது.
இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் ஹபங்கட்டா, பாகேஷாபுரா, ஹாசன், மாவின்கெரே, ஹொலேநரசிப்புரா, அன்னேசக்கனஹள்ளி, ஸ்ராவனூா், மண்டேகெரே, பீரஹள்ளி, அக்கிஹெப்பாளு, ஹொச அக்ரஹாரா, அா்ஜுனஹள்ளி, ஹம்பாபுரா, கிருஷ்ணராஜநகரா, தோரனஹள்ளி, சாகா்கட்டே, கல்லூரிஹெடஹள்ளி, கிருஷ்ணராஜசாகா், பெலகுலா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
ரயிலில் 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 10 பொதுப் பெட்டிகள், பிரேக், சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.