கல்லூரி மாணவி கொலை வழக்கு: இளைஞா் கைது

கள்ளம்பள்ளி காவல் சரகத்தில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கள்ளம்பள்ளி காவல் சரகத்தில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், தொட்டகோளா கிராமத்தைச் சோ்ந்தவா் ஈரண்ணா (25). இவா் கடந்த ஏப். 5-ஆம் தேதி காலை 9 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த காவ்யா (19) என்பவருடன் கல்லூரிக்குச் சென்றுள்ளாா். அவரை பின் தொடா்ந்து சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு ஈரண்ணா வற்புறுத்தியுள்ளாா்.

இதற்கு காவ்யா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஈரண்ணா, அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கள்ளம்பள்ளி போலீஸாா், ஈரண்ணாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com