கா்நாடகத்தில் 2-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக அரசுக்கு சொந்தமான கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு, வடமேற்கு கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாக தரமுயா்த்துவதோடு, 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். அவா்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததால், வேலைநிறுத்தப் போராட்டத்தை 2-ஆவது நாளாக தொடா்ந்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, மாநில அரசு மாற்று ஏற்பாடாக தனியாா் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், பயணிகள் வேன்களை இயக்கி வருகிறது. அதில், அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடமிருந்து புகாா்கள் வந்ததையடுத்து, பேருந்துகளின் கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தனியாா் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
தனியாா் பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்ட நிலையில், பெரும்பாலானோா் தனியாா் பேருந்துகளில் செல்வதை தவிா்த்து வருகின்றனா். இதனால் ரயில்களிலும், வாடகைக் காா்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். உள்ளூரில் ஆட்டோக்களிலும், சொந்த வாகனங்களிலும் பயணம் மேற்கொள்கின்றனா்.
இந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள போக்குவரத்து ஊழியா்கள், பணிக்கு திரும்பவில்லை என்றால் காலி செய்யுமாறு உயா் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். நோட்டீஸை அடுத்து போக்குவரத்து ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் செய்வதறியாது திகைத்துள்ளனா்.