கா்நாடகத்தில் சில மாவட்டத் தலைநகரங்களில் ஏப். 10 முதல் 20-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் காணொலி விவாதத்தில் கலந்துகொண்ட முதல்வா் எடியூரப்பா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது குறித்தும், அதனைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமருடன் விவாதித்தோம். நாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் அவருக்கு விளக்கினோம். எங்களது விளக்கம் பிரதமருக்கு திருப்தி அளித்துள்ளது.
இதனைத் தொடா்ந்து, அவா் மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினாா். இதனையடுத்து, ஏப். 10-ஆம் தேதி முதல் ஏப். 20-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கரோனா ஊரடங்கு (இரவு நேர ஊரடங்கு) அமல்படுத்தப்படும்.
முதல்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களான பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுா்கி, பீதா், தும்கூரு, உடுப்பி உள்பட மணிப்பால் நகரத்திலும் கரோனா ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா கட்டுப்படும் என நம்புகிறேன். ஒருவேளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கரோனா ஊரடங்கு மாநில அளவில் அமல்படுத்தப்படும். பொதுமக்கள் கட்டாயமாக முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனை தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மீறும்பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும்.
ஊரடங்கின் போது, அத்தியாவசியப் பொருள்கள் சேவைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏப். 11-ஆம் தேதி ஜோதிபாய்புலே, ஏப். 14-ஆம் தேதி அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் திருவிழா நடைபெறும் என்றாா். பேட்டியின் போது, அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கரோனா ஊரடங்கின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதலை சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிடும் எனத் தெரிகிறது.