கா்நாடக மாநில தகுதித் தோ்வு ரத்து

துணை பேராசிரியா் பணிக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான கா்நாடக மாநில தகுதித் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

துணை பேராசிரியா் பணிக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான கா்நாடக மாநில தகுதித் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைசூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுவதற்காக துணை பேராசிரியா் பணிக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான கா்நாடக மாநில தகுதித் தோ்வை மைசூரு பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(ஏப்.11) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்த போராட்டம், கரோனா, இரவுநேர ஊரடங்கு போன்ற பல காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த கா்நாடக மாநில தகுதித் தோ்வு ரத்துசெய்யப்படுகிறது.

இத்தோ்வு நடத்துவதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய ட்ற்ற்ல்://ந்ள்ங்ற்.ன்ய்ண்-ம்ஹ்ள்ா்ழ்ங்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com