கா்நாடகத்தில் கரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக பெங்களூரு மாறியுள்ளது

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக பெங்களூரு மாறியுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக பெங்களூரு மாறியுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் பரவி வரும் கரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக பெங்களூரு மாறியுள்ளது. கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 70 சதவீதம் போ் பெங்களூரைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள். பெங்களூரு உள்ளிட்ட 7 இதர மாவட்டங்களில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கரோனா பாதிப்பு பகுதிகளாகக் கண்டறிந்துள்ளோம்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி ஆகியோா் ஆலோசனைகளைக் கேட்டறிந்து கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவோம். கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது வெறும் அரசு வேலை மட்டுமல்ல. கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள போரில் தொடா்ந்து போராடுவோம். மக்களின் உயிரைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com